வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. செய்திகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

First News Paper in India

James Augustus Hickey or Hicky, a highly eccentric Irishman who had previously spent two years in gaol for debt, Hickey's Bengal Gazette or the Calcutta General Advertiser was the first English language newspaper, and indeed the first printed newspaper, to be published in the Indian sub-continent.

It was a weekly newspaper, and was founded in 1779, in Calcutta, the capital of British India. The memoirist William Hickey (who, confusingly, was not in fact related to the paper's founder) describes its establishment shortly after he had succeeded (in his capacity as an attorney-at-law) in having James Hicky released from debtor's gaol.

http://en.wikipedia.org/wiki/
Hickey's_Bengal_Gazette


 
  ------------------------------  
 

Guinness World Record for the world's smallest newspaper

From The Guinness World Records 2010: 'the smallest newspaper measures 32 x 22 mm (1.25 x 0.86 in) achieved by First News Newspaper in West Horsley, Surrey, UK published on the November 8, 2007 in celebration of Guinness World Records Day.'

http://www.firstnews.co.uk/
weird/first-news-is-the-worlds-smallest-newspaper-i97

 
     
   
செய்திகள்
1
 

          உலகின் முதல் செய்தி தாள்

 

Johann Carolus (1575 - 1634) was the publisher of the first newspaper, called Relation aller Fürnemmen und gedenckwürdigen Historien (Collection of all distinguished and commemorable news). The Relation is recognised by the World Association of Newspapers[1], as well as many authors[2] as the world's first newspaper. The German Relation was published in Strassburg, which had the status of an imperial free city in the Holy Roman Empire of the German Nation.

 

 
  ---------------------------------  
  ஸ்வதேசமித்ரன்

இந்தியாவில் பதிப்பிக்கப்பட்ட தமிழின் முதல் செய்தி் தாள்.

இந்த செய்தி தாள் இந்தியா மட்டுமின்றி, பர்மா, சிங்கப்பூர், மலேசியாவின் சில பகுதிகள், பெனாங், இலங்கை, சுமத்ரா, சீனா, தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பரிக்க நாடுகளில் கூட பரவலாக வாசகர்களைப் பெற்றிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்த செய்தி தாள் பதிப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.indianetzone.com/
24/swadesamitran_first_
tamil_newspaper.htm
 
 

 

 

 
  ---------------------------------  
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  மற்றவை TS செய்திகள் செய்திகள் வாயில்


வம்சி பதிப்பகத்தின் நூல்கள் வெளியீட்டு விழா
- 2

சா.ரு. மணிவில்லன், பத்மநாபன்  

வம்சி பதிப்பகத்தின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா சென்னை இக்சா மையத்தில் 31.01.2010 ஞாயிறு அன்று நடைபெற்றது. பதிப்பாளர் பவா செல்லத்துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கே வி ஜெயஸ்ரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

முதல் நிகழ்வாக உதய சங்கரின் பிறிதொரு மரணம் சிறுகதை தொகுப்பை ஓவியர் ட்ராஸ்கி மருது வெளியிட ரவிசங்கர் பெற்றுக்கொண்டார். ஓவியர் மருது அவசரமாக செல்ல வேண்டி இருந்ததால் நூலைப்பற்றி அவர் ஏதும் பேசவில்லை.

நான் ஆய்வாளர் அல்ல. எளிய வாசகன். என் வாசக அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என ஆய்வாளர் மணிமாறன் பேசினார். மேலும் உதய சங்கரின் படைப்பு நேர்மைக்கு ஏற்ற வெளிச்சம் அவர் மீது படவில்லை. பல கதைகள் என்றென்றைக்கும் ரசிக்கத்தக்க கதைகளாக உள்ளன. திருநெல்வேலி, கோவில்பட்டி பகுதியை சார்ந்த விளிம்புநிலை மனிதர்களே அவருடைய கதைமாந்தர்கள். அவர்களின் மன நுட்பங்களை மிகவும் நுண்மையாக பதிவு செய்துள்ளார். குறிப்பாக பூனைவெளி என்ற சிறுகதையில் பாலியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட பெண்ணின் மனநிலையை மிகவும் நுட்பமாக பதிவு செய்துள்ளார் என மணிமாறன் கூறினார். உதய சங்கரின் வேறு சிறு கதைகளையும் மேடையில் உணர்வு பூர்வமாக நினைவுகூர்ந்தார்.

ஏற்புரையாக உதய சங்கர் பேசுகையில்: ”என் வாழ்வில் படைப்பு சம்பந்தமாக நடைபெறும் மூன்றாவது மகிழ்ச்சிகரமான நிகழ்வு இதுவாகும். 1980 ஆண்டு என் முதல் சிறுகதை செம்மலர் இதழில் வெளிவந்தது. 1988 ஆண்டு என் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவந்தது. இன்று (2010) பிறிதொரு மரணம் வெளிவருகிறது. இந்த நல்வாய்ப்பை ஏற்படுத்தி தந்த பவாவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.”

1980-85 ஆண்டுகளில் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த காலகட்டம் அது. அப்போது ’புரட்சி நடந்துவிடும்.... நம் வாழ்க்கை மேம்பட்டுவிடும்’ என முழுமையாக நம்பிய காலம் அது. 85-ம் ஆண்டுக்கு பிறகு புரட்சி பற்றி எண்ணம் மறைந்து வேலை தேடி அடைந்தேன். அப்போது எனக்கு அறிமுகமான திருவண்ணாமலை பவா, கருணா ஆகிய நண்பர்களோடு இலக்கிய விவாதம் நடத்தினேன். அந்த விவாதம் எனக்கு என் தனிமையை போக்க ஒரு வடிகாலாகவும் இருந்தது. பிறகு கொஞ்சம் மொழிபெயர்ப்பு செய்தேன். குழந்தைகளுக்கான இலக்கியம் படைத்தேன். கவிதை எழுதினேன். இன்று உங்களோடு இருப்பது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்.

இரண்டாவது நிகழ்வாக சா. தேவதாஸ் மொழி பெயர்த்த லூயி புனுவலின் இறுதி சுவாசம் என்ற நூலை இயக்குனர் பாலுமகேந்திரா வெளியிட கவிஞர் இந்திரன் பெற்றுக் கொண்டார்.

”நகர வாழ்க்கையே நரக வாழ்க்கைதான், அன்பையும், சமாதானத்தையும் பரப்பும் கிறிஸ்தவ பாடல்கள் ஒருபுறம் ஒலிக்க மற்றொருபுறம் லூயி புனுபலின் இறுதி சுவாசம் பற்றி பேசிக்கொண்டிருப்பது நன்றாக உள்ளது. லூயி புனுபலின் பல திரைப்படங்களை பார்த்து ரசித்துள்ளேன். அவைகள் மிகுயதார்த்தம் சார்ந்தவைகள் அவருடைய படங்களில் அறச்சீற்றம் காணப்படும். ஒரே காலகட்டத்தில் மிக சிறந்த கலைஞர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் நல்ல நண்பர்களாகவும் இருந்திருக்கிறார்கள். புனுவலும், டாலியும், லோர்க்காவும் நான் பெரியவன் என்பதாக இல்லாமல் நான் சிறியவன் என்ற மனோபாவத்துடன் பழகியுள்ளார்கள். கலைஞன் கனவு காணப்படுபவன். பிள்ளைகள் எப்போது புத்தகத்திற்குள் இருக்கும் மயிலிறகு குட்டி போடாது என தெரிந்துக் கொள்கிறார்களோ அப்போதுதான் அவர்கள் கெட்டுப்போகிறார்கள். கனவு காணும் மனமே உயர்கலைகளை படைக்கும். புனுவலை மொழிபெயர்ப்பு செய்த தேவதாஸின் பங்களிப்பு தமிழுக்கு அவசியமான ஒன்றாகும். இந்நூலில் புனுவல் பற்றிய ஒரு ஆய்வுக்கட்டுரையை சேர்த்தால் நன்றாக இருக்கும்” என எழுத்தாளர் பிரபஞ்சன் கூறினார்.
இங்கு இவ்வளவு பேர் கூடியிருப்பது சிறப்பாக உள்ளது. இது ஒரு நல்ல கூட்டம். தேவதாஸ் தொடர்ந்து மொழிபெயர்த்துக் கொண்டுள்ளார். எது அவரை மொழிபெயர்க்க தூண்டுகிறது என யோசித்துப்பார்க்கிறேன். ஒரு மொழிபெயர்ப்பு என்பது ஒரு பண்பாட்டை மொழிப்பெயர்ப்பது. அதை தேவதாஸ் சிறப்பாக செய்துள்ளார். இன்று ஒரு வாசகன் எழுத்தாளனைக் காட்டிலும் நுட்பமானவன். ஒரு கலைஞனுக்கு தமிழ்நாட்டில் நல்ல களம் இருப்பதாக சொல்லமுடியாது. புத்தகம் என்பது இறந்து போன காலத்தின் நிழல் எனக் கவிஞர் இந்திரன் கூறினார்.

நானும் புனுவலும் ஒன்று சுயசரிதம் என்பது வெறும் உண்மைகள் மட்டுமே. எனக்கும் பல புத்தகங்கள் எழுதவேண்டும் என்ற ஆசையுள்ளது. ஒரு மனிதனைப் படிப்பது தன்னையே படிப்பது போன்றதாகும். மிகக் குறைவான நேரங்களில்தான் சந்தோசத்தை அனுபவிக்க முடியும். புனுவலை வாசிக்கும்போது சந்தோசமாக இருக்கிறேன். பல படங்களை பார்த்து திரைப்படத்தை கற்றுக் கொள்ள முடியாது. புத்தகங்களை படிக்க படிக்கத்தான் கற்றுக் கொள்ள முடியும். நல்லது என்ன என்ற தேடுதல்தான் என்னை நல்ல படம் எடுக்க தூண்டுகிறது என இயக்குனர் மிஷ்கின் கூறினார்.

எனக்கு சுயசரிதை எழுத ஆசை, ஆனால் பல விசயங்களை சொல்ல முடியுமா என்ற தயக்கம் . ஆனால் லூயி புனுவலின் இறுதி சுவாசத்தை படத்தவுடன் நானும் சுயசரிதை எழுதலாம் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. தனது பெருமைகளை மட்டுமல்லாமல் தனது சிறுமைகளையும் புனுவல் பதிவு செய்துள்ளார். படைப்பாளிக்கும் சாமானியனுக்கும் உள்ள வேறுபாடு என்பது ஒரு விசயத்தை நுட்பாக கவனிப்பதில்தான் இருக்கிறது. நுட்பமானவைகளை கவனிக்கும் நுண்ணறிவுதான். கூர்மைப்படுத்தப்பட்ட நுண்ணறிவுதான் படைப்பாளியை ஒரு படைப்பை உருவாக்கத் தூண்டுகிறது. படைப்பை உருவாக்கும் அதே நுண்ணறிவுதான் படைப்பாளியின் சொந்த வாழ்க்கையை நாற அடிக்கிறது.

இந்த நூலை திரைப்பட கல்லூரியில் பாடமாக வைக்கலாம். கண்டிப்பாக என்னுடைய திரைப்பட கல்லூரியில் பாடமாக வைக்கப்படும். ஏற்கனவே என்னுடைய திரைப்பட கல்லூரியில் நவீன இலக்கியம் கட்டாய பாடமாக உள்ளது. நானொரு தீவிர இலக்கிய வாசகனாக இருப்பதுவே என் சினிமா பலமாக கருதுகிறேன்.

எல்லோரும் ஊட்டியை படம் எடுக்கிறார்கள். ஆனால், நீங்கள் ஊட்டியை படம் எடுக்கும்போது மட்டும் எப்படி இவ்வளவு சிறப்பாக இருக்கிறது என பலர் என்னிடம் கேட்கிறார்கள். நான் நின்ற இடத்திலிருந்துதான் அவர்களும் படம் பிடிக்கிறார்கள். ஏன் மாறுபடுகிறது. நான் கடவுள் நம்பிக்கையுள்ளவன் என்ற முறையில் ஒரு மகா சக்தியால் படைக்கப்பட்டவற்றை நான் நகல் எடுக்கிறேன் என்ற பயபக்தியுடன் வேலை பார்க்கிறேன். நீங்களும் அதே பயபக்தியுடையவனாக இருந்து வேலை பார்த்தால் எல்லாம் சாத்தியமானதே. படைப்பாளிக்கு அங்கீகாரம் மிகவும் அவசியம் என இயக்குனர் பாலுமகேந்திரா கூறினார்.

மூன்றாவது நிகழ்வாக ச தேவதாஸ் மொழிபெயர்ப்பில் ஹென்றி ஜேம்ஸின் அமெரிக்கன் நாவலை எழுத்தாளர் எஸ் சக்திவேல் வெளியிட அர்ச்சனா பெற்றுக்கொண்டார்.

எழுத்தாளர் எஸ் சண்முகம் அமெரிக்கன் நாவலை முன் வைத்து தமிழ் இலக்கியச் சூழலை ஆராய்ந்தார். கடந்த 25 வருடங்களில் மொழிபெயர்ப்பு ஏற்படுத்திய மாற்றங்களை பட்டியலிட்டார். குறிப்பாக நவினத்துவம் சார்ந்தும், சோசலிச நவினத்துவம் சார்ந்தும், பிறகு வட்டார வழக்குகள் சார்ந்தும் வெளிவந்த நாவல்கள் பற்றியும் கூறினார். தமிழில் க நா சு அதிக மொழிபெயர்ப்புகளை செய்துள்ளார். தற்காலத்தில் குப்புசாமி, தேவதாஸ் போன்றோர் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்வதாக கூறினார். ஹென்றி ஜேம்ஸின் நாவல்கள் 30 தொகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஜேம்ஸ் நாவல் வடிவத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தார். இந்த நாவல் தமிழில் புதிய விவாதத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையும் வெளிப்படுத்தினார்.

கவிஞர் கடற்கரய் மிகவும் நகைச்சுவையாக தன் பேச்சை ஆரம்பித்தார். வம்சி வெளியிட்ட சிதம்பர நினைவுகள் மொழிபெயர்ப்பு பற்றியும், திருவண்ணாமலையில் நடைபெற்ற வந்த முற்றம் பற்றியும் விரிவாக பேசினார். எல்லா வகையான எழுத்தாளர்களையும் ஒரே மாதிரி மரியாதையுடனும் அன்புடனும் கவனிக்க உபசரிக்க பவாவால் மட்டுமே முடிகிறது. அதுபற்றிய தன்னுடைய ஆச்சரியங்களை வெளிப்படுத்தினார். குடியை கொண்டாடும் என்னை குடிப்பற்றிய விவரணைக்கூட இல்லாத இந்த நூலைப்பற்றி பேச அழைத்தது பற்றி வருத்தப்பட்டுக் கொண்டார். ஹென்றி ஜேம்ஸின் அமெரிக்கன் நாவல் ஒரு நாவல் எப்படி எழுத வேண்டும் என்பதற்கு வரைபடமாக உள்ளது எனக் கூறினார். ஜேம்ஸ்-யை இரண்டு நாடுகள் உரிமை கொண்டாடும் அளவுக்கு புகழோடு வாழ்ந்தார் எனவும் கூறினார்.
தமிழ் நாட்டில் நகரம் கிராமம் என்ற வேறுபாடுகளில் கிராமத்து மனிதர்கள் உயர்வானவர்களாக பார்க்கப்படுவதை கிண்டல் செய்தார். மனிதர்கள் வாழும் எல்லா இடங்களிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் இருப்பார்கள். நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும் தன்னை கிராமத்து மனிதன் என வெளிப்படுத்திக் கொள்ள விரும்பும் எழுத்தாளர்களை ஏளனம் செய்தார். கவிஞர் கடற்கரய்-ன் பேச்சு அவையை கலகலப்பாக வைத்திருந்தது.

இறுதி சுவாசம், அமெரிக்கன் இரு நூல்களையும் மொழிபெயர்த்த ச தேவதாஸ் தன்னுடைய ஏற்புரையில் அந்த கலைஞர்கள் சக தேடலையே வாழ்க்கையாக இருந்தவர்கள் என கூறினார். மேலும் தன் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டவருக்கும், வாழ்த்திய அன்பர்கள் அனைவருக்கும் தன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இறுதியாக அமலதாஸ் அனைவருக்கும் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
ஞாயிறு காலை வேளையில் இவ்வளவு இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று கூடியதும், மதிய உணவு நேரத்தை கடந்த பிறகும் நீடித்த கூட்டத்திற்கு இறுதிவரை இருந்ததும் ஆச்சரியமாக உள்ளது. வாசக சூழல் ஆரோக்கியமாக இருப்பதையே இது காட்டுகிறது.


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.



   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.
</