வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 17

சக்தி ஜோதி  

வெளிநாடு செல்பவர்கள் இயல்பாக சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று நேரத்தை பின்பற்ற தவறுவது. பொதுவாக இங்கு ஆறு மணிக்கு நிகழ்ச்சி என்றால் ஆறரை மணிக்கு போனால் போதும் என்கிற மெத்தனம் நம்மிடையே இருக்கிறது. எனவே இது போன்ற அரசு முறை அழைப்பில் சென்றாலும் கூட பயணத்திட்டத்தில் இங்கே இளைஞர்களில் பலர் குறைந்தபட்சம் ஐந்து நிமிட தாமதத்தையாவது ஏற்படுத்தி கொண்டிருந்தனர், நான் உட்பட. ஆனால் கமலக்கண்ணன் அப்போதுமே ஐந்து நிமிட தாமதத்தை கடைபிடிக்க தவறுவதே இல்லை. நானும், அருள்கண்மணியும், கமலக்கண்ணனுக்காக காத்திருந்து காத்திருந்து திரு. கேவல்யாவின் கவனத்தில் படுவதிலிருந்து தப்பிப்பதே இல்லை. எப்போதுமே கேவல்யா எங்கள் மூவரையும் பார்த்து ஷலோ ஷலோ அப் ஷலோ என்று விரட்டிக் கொண்டே இருப்பதும் சில சமயங்களில் அருள்கண்மணி கோபத்தின் உச்சியில் கமலக்கண்ணனை அடிப்பதும் வழக்கமாகிவிட்டது.

கியூஷோ நகரத்தில் ஒரு நாள் காலையில் கமலக்கண்ணனால் ஏற்பட்ட தாமதத்தால் காலை உணவை விட்டுக் கொடுக்க வேண்டி வந்துவிட்டது. மைக்கேல் என்கிற சீன இளைஞன் கேவல்யாவிடம் இருந்து கற்றுக் கொண்ட ஒரே வார்த்தை ஷலோ ஷலோ அப் ஷலோ. ஐந்து நிமிட தாமதத்தில் சாப்பாட்டு மேஜைக்கு வந்த எங்களை மைக்கேல் ஷலோ ஷலோ அப்ஷலோ என சாப்பிட விடாமல் எழுப்பி விட்டான். கையில் சிக்கின பழம், பிரட் போன்றவற்றை எடுத்துக் கொண்டு பஸ்ஸிற்கு ஓடினோம். ஆனால் கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் கமலக்கண்ணன் வந்து சேர்ந்தான். மதிய உணவிற்கு முன்பு இருபது முறையாவது அருள்கண்மணி பசிக்குது என்று கூறி விட்டாள். ஆனால் எதுவுமே வாங்கிச் சாப்பிட முடியாத ஹீயூ மலைப்பகுதிக்கு அன்று நாங்கள் சென்றிருந்தோம்.

மார்பிள் கற்கள் நிறைந்த நானூற்று ஐம்பத்தைந்து மீட்டர் உயரமுடைய இந்த ஹியூ மலைப்பகுதியை மார்கோபோலோ பார்வையிட்டு இருப்பதாக அங்கே ஒரு கல்வெட்டு இருக்கிறது. டிரம் போன்ற வடிவத்துடன் இந்த மலை உள்ளதால் தான் ஹியூ மலை என்று பெயர் வந்தது. முந்நூறு பாறைக் குகைகள் நிரம்பிய மிகப்பெரிய மலைக் குன்று அது. இந்த மலைத்தொடர் சீனாவிலிருந்து கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மலைத் தொடரில் ஆயிரம் அரிய வகை தாவரங்களும், நூறு ஆண்டுகளுக்கும் மேலான ஆயிரக்கணக்கான அரிய வகை மரங்களும் நிரம்பியிருக்கிறது. மேகக் கூட்டங்கள் புகுந்து செல்வதற்கு ஏதுவாக பாறைக் குகைகளும், பள்ளத்தாக்கிற்குள் பள்ளத்தாக்குகளும் அமைந்திருப்பதால் வானத்தில் முளைத்த மலைக்குன்றுகள் போல இருக்கின்றன. இந்த குன்றுகளை காற்று ஊடுருவி செல்லும் போது இசைக்கருவிகள் இசைப்பது போல் இருக்கின்றது.

தமிழகத்தில் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பது போல சீனாவில் மலைச் சார்ந்த பகுதிகளில் எல்லாம் புத்தர் கோவில் இருக்கிறது. வற்றாத புனித நீரூற்றுக்கு அருகில் அமைந்த தங்க நிற புத்தரை தரிசிக்க சென்றோம். அங்கே நான் பார்த்து ரசித்த ஒன்று, சிவப்பு நிறத்தில் குடை போன்ற தோற்றத்தில் தங்க நிறத்திலான சிறிய சிறிய மணிகளால் நிரம்பிய மணிக்கூண்டு ஒன்று இருந்தது. இது பொதுவாக ஆயிரம் முதல் பத்தாயிரம் மணிகள் நிரம்பிய மணிக்கூண்டாக இருக்கும். வேண்டுதலை நிறைவேற்ற சுருள் வடிவத்தில் சரம் சரமாக உள்ள அந்த மணிகளை சுற்றி விடுவது சீனர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த மலைக்குகை புத்தரை தரிசித்து விட்டு பள்ளத்தாக்கில் உள்ள புத்தர் யாங் குவான் என்கிற புத்தர் கோவிலுக்கு வந்தோம். இந்தக் கோவில் கி.பி.908ல் கட்டப்பட்டு பின்பு ஐந்து வம்சத்து அரசர்களால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலில் மூன்று பொக்கிஷங்கள் இருக்கிறது. ஒன்று அங்கே புத்தரின் ஆயிரம் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது புத்தரின் உருவம் பதித்த பத்தாயிரம் தட்டுக்கள் இருக்கிறது. மூன்றாவது புத்த துறவிகளின் இரத்தத்தால் எழுதப்பட்ட அறுநூற்றி ஐம்பத்தி ஏழு கல்வெட்டுக்கள் இருக்கிறது. மேலும் இருபத்திநான்கு பெரிய அறைகளில் புத்த துறவிகளின் இருபத்தி ஏழாயிரத்து தொள்ளாயிரம் கையெழுத்து பிரதிகள் உள்ளது. மலைக்குகைக்கு செல்லும் வழி எங்கும் பாசி படர்ந்த மலையில் உள்ள கல்வெட்டுக்களின் பாதையெங்கும் சிவப்பு வண்ணத்தில் புத்த துறவிகளின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இயற்கையும், இறைவனும் ஒன்று என திரும்பும் பக்கம் எல்லாம் பிரதிபலித்துக் கொண்டே இருந்தது அந்த மலை.

மலை உச்சியில் இருக்கும் போது பள்ளத்தாக்கில் கோவில் தென்படவில்லை. அதே போல பள்ளத்தாக்கிற்கு உள்ள கோவிலுக்கு வந்து அண்ணாந்து பார்த்தால் மலையைக் காணோம். இந்த மலைத்தொடரின் அதிசயமே மலையில் இருந்து பார்த்தால் கோவில் தெரியாது. கோவிலிலிருந்து பார்த்தால் மலை தெரியாது. சமதளத்தில் அமைந்தது போல் இருக்கிறது அந்த கோவில். கோவில் குளத்தின் நடுவே மீன் கூடை வைத்து நின்று கொண்டிருந்த குவான் இன் தெய்வத்தின் அழகில் மயங்காதவர் ஒருவரும் இல்லை. செல்லும் இடமெல்லாம் குவான் இன் கூடவே வருவதைப் போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்த தவறவில்லை. பசியோடு இருந்த எங்களுக்கு குவான் இன் சிலை இளைப்பாறுதல் தந்தது போல இருந்தது.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.