ரிதுபர்னோ கோஷ் - மாற்றம் தந்த இயக்குனர்
 
 
  தமிழ் ஸ்டுடியோவின் 54வது குறும்பட வட்டம் - தினேஷ்
 
 
  குறும்பட இயக்குனர் பாலாஜி சுப்பிரமணியன் உடன் ஒரு நேர்காணல் - சுரேஷ் சுந்தர்
 
 
   

உயிர் கொடுக்கும் கலை 4 - டிராட்ஸ்கி மருது (எழுத்தாக்கம்: யுகேந்தர்)

மூன்றாவது அல்லது நான்காவது படித்துக்கொண்டிருந்த காலம் என்று நினைக்கிறேன். சிறு வயதில் அப்பாவுடன் மதுரை ரீகல் தியேட்டரில் பார்த்த திரைப்படங்களில் ஒரு சில பிம்பங்கள் (Images) என்னை பாதித்தது, மிக அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது. மனிதர்களை விரட்டும் பெரிய ஒற்றை கண் பூதம், மலைகளுக்கு நடுவில் தண்ணீரில் பெரிய கப்பல் ஒன்று வந்துக்கொண்டிருக்கும், ஆனால் அந்த பூதத்திற்கு தண்ணீர் இடுப்பளவு தான் இருக்கும், மிக பெரிய அந்த கப்பலை அந்த பூதம் பிடிக்க வருவது போன்ற காட்சிகள் அப்படத்தில் இடம்பெற்றது. சிறு வயதில் அப்பாவுடன் திரையரங்கத்தில் படம் பார்க்கும் போது, முன்பு அமர்ந்து இருப்பவர்கள் மறைப்பார்கள், சிறுவனாக இருப்பதால் எனக்கு திரை சரியாக தெரியாது. அதனால் முன்னிறுக்கையில் அமர்ந்து இருக்கும் இருவரின் தலைக்கு இடையில் திரையை பார்ப்பேன்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

தென்மேற்கு பருவக் காற்று – புதிய முயற்சிகளில் ஒன்று - வெங்கட் சாமிநாதன்

கடைசியாக தமிழ் சினிமா கிராமத்தையும் கிராமத்து மக்களையும் தனதாக்கத் தொடங்கியுள்ளது. சந்தோஷமான விஷயம். கவனிக்கவும், “தனதாக்கத் தொடங்கியுள்ளது” என்று தான் சொல்கிறேன். கிராமத்துப் பக்கம் பார்வை செல்லத் தொடங்கிய பெருமை பாரதிராஜாவுக்கு நாம் தந்து வெகு வருஷங்களாயிற்று. நாம் தமிழ் சினிமாவில் பார்க்கும் எந்த ஒரு சிறு மாற்றத்தையும் கண்டு பரவசமாகிவிடுகிறோம். இவையெல்லாம் தானாக தன் இயல்பில் நம் வாழ்க்கையின் இயல்பில், நம் ஒவ்வொருவரின் வளர்ச்சியின் இயல்பில் நிகழ்வேண்டியது அனைத்தும் நம் சினிமாவில் அந்த ஒழுங்கில் நிகழ்ந்திருக்க வேண்டும். இங்கு வரலாறு தலைகீழாகவே நம் முன் விரிந்து கொண்டு இருக்கிறது. நம் வளர்ச்சியின் உடன் நிகழும் இயல்புக்கு மாறாக....

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------

கடவுளரின் தலையீடு : கனவும் யதார்த்தமும் - யமுனா ராஜேந்திரன்

பாலஸ்தீன இயக்குனர் எலியா சுலைமானின் டிவைன் இன்டர்வென்சன் அல்லது கடவுளரின் தலையீடு இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டுக்கான கேன் திரைப்பட விழா நடுவர்களின் விருதுபெற்ற திரைப்படம். குரோனிக்கல் ஆப் த டிஸ்ஸப்பியரன்ஸ் எனும் அவருடைய முதல் படத்தினையடுத்து குரோனிக்கல் ஆப் லவ் அன்ட பெய்ன் எனும் துணைத்தலைப்புடன் எடுக்கப்பட்ட திரைப்படம் டிவைன் இன்டர்வென்சன். அவருடைய முதல் படத்தில் பாலஸ்தீன நிலப்பரப்பினுள் பாலஸ்தீன மனிதனின் இருப்பு காணாமல் போகிறது. அவரது இரண்டாவது படத்தில் அந்த காணாமல்போன பாலஸ்தீன மனிதனினது இருப்பின் வலியும் காதலும் சொல்லப்படுகிறது. இந்த வலியும் காதலும் கூட பாலஸ்தீன மனிதனால் புலன்வழி உணரப்படுவதற்கு கடவுளரின் தலையீட்டின் மூலமே சாத்தியமாகும் என்பதைக் காட்சிக்கனவுகளாக இழைத்திருக்கிறார் சுலைமான்.

  மேலும் படிக்க
------------------------------------------------------------------------------------------------------------------------------
   
 
நாவலும் திரைப்படமும் - எழுத்து திரைப்படமாகும் போது - எஸ். ஆனந்த்

ஒரு திரைப்படத்தைக் கொண்டு அதை உருவாக்கப் பயன்படுத்தப்படிருக்கும் நாவலை எடை போடதீர்கள் எனும் வாசகத்தை நீங்கள் படித்திருக்கக் கூடும். பிற கலைகள் போல அன்றி திரைப்படக் கலை தொழில் நுட்பம் சார்ந்தது. காமெராவால் பதிவு செய்யப்படுவது. இந்த ஒன்றிற்காகவே ஆரம்ப காலத்தில் திரைப்படக் கலையை இரண்டாம் தரக் கலையாக ஒரு சில கோட்பாட்டாளர்கள் நிறுவினர்.

  மேலும் படிக்க
 
 
அன்பைத் தேடி ஒரு தப்பித்தல் - எம்.ரிஷான் ஷெரீப்

திருமணம் முடிப்பதற்காகப் பேசி வைத்திருக்கும் மணப்பெண்ணான நெகாருடன் தமது வாழ்க்கை பற்றிக் கலந்துரையாட முற்படும்போதெல்லாம் மணமகன் இமானை ஒரு தொலைபேசி அழைப்பு குறுக்கிடுகிறது. அதனைத் தொடர்ந்து அவன் கலவரமடைந்து உடனே அவளை விட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்று விடுகிறான். அவள் அவனைச் சந்திக்கும்போதெல்லாம் அவளைப் புதிருக்குள்ளும்...

  மேலும் படிக்க
       
 
 
நண்பரும் தோழருமான மணிவண்ணன் - யமுனா ராஜேந்திரன்

'எழுபதுகளின் மத்திய ஆண்டுகள். கோயமுத்தூர் மாவட்டத்தின் சிங்காநல்லார் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சிற்றூரான உப்பிலிபாளையத்தில் இருந்த ஸ்டீல் பர்னிச்சர் உற்பத்திப் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வதற்காகச் சூலூரிலிருந்து மணிவண்ணன் சைக்கிளில் வருவார். தொழிற்சாலைக்கு எதிரில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கிளை அலுவலகமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மன்றம் இருந்தது. மதிய உணவருந்திவிட்டு கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் வைத்திருந்த பெட்டிக் கடையில் பீடியோ...

  மேலும் படிக்க
 
 
இலங்கை திரைப்பட இயக்குநர் - பிரசன்ன விதானகே - விஸ்வாமித்திரன்

இருப்பில் (சற்றும் எதிர்பாராத) அகண்ட வெளிச்சம் பாய்வது போல ஒரு காலையில் எனது நண்பர் தொலைபேசியில் “இலங்கைத் திரைப்பட இயக்குநர் பிரசன்னா விதானகே சென்னை வந்திருக்கிறார் . சந்திக்கிறீர்களா? “ எனக்கேட்டார். சில வினாடிகள் நான் பேச்சற்று நின்றிருந்தேன். உணர்வடங்கி தூங்கின ஒரு கனவுப் பொழுதில் தொட்டுப் பார்த்து ரசித்த கல்சிற்பத்தை நேரில் காண்பதாயிருந்தது அந்த நிலை.சினிமா சார்ந்த கலையுணர்வும் வாழ்வனுபவமும் ஆழப் பிளவுண்டிருக்கும் தமிழ்ச்சூழலை எண்ணி சோர்வடையும் படி...

  மேலும் படிக்க
   
 
 
 
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
   
     
     
     
     
     
     
     
     
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

காப்புரிமை © பேசாமொழி

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome