வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கதை சொல்லி பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

கி.ராஜநாராயணன்

கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர்.

 

 

 

 
     
     
     
   
கதை சொல்லி
1
 
 

கௌதம நீலாம்பரன்

கௌதம நீலாம்பரன், 'தீபம்' ந. பார்த்தசாரதியின் இலக்கிய சீடரான இவர், தொடர்ந்து நாற்பதாண்டுக் காலம் பத்திரிக்கை துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். ஆனந்த விகடன், குங்குமம் போன்ற புகழ்பெற்ற வாரப்பத்திரிக்கையில் பணியாற்றிய இவர், வெகு ஜனப் பத்திரிக்கையில் பணியாற்றியபோதும்,
"இதயம் பேசுது" போன்ற சிறுபத்திரிக்கையிலும் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

தமிழின் சரித்திர நாவலாசிரியர்களில் மிக முக்கியமானவர். இவர் எழுதிய சரித்திர நாவல்கள், தமிழக ஹாரிபாட்டர் கதைகள், யாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி, தத்வமஸி, நலம் தரும் நற்சிந்தனை, அன்பின் அலைவரிசை, ராஜபொக்கிஷம், பல்லவன் தந்த அரியணை, சேது பந்தனம் போன்றவை தமிழ் மொழியின் சரித்திரப் பங்களிப்பில் முக்கியமானவை. இவர் எழுதிய சேது பந்தனம் சரித்திர நூல், ஆனத விகடன் பொன் விழா ஆண்டில் நடத்திய நாவல் போட்டியில் இரண்டாம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

 

 
     
     
     
     
     
     
 

 

 

 
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  கதை சொல்லி

 

 
 

கதை சொல்லி - சரித்திர நூலாசிரியர் கௌதம நீலாம்பரன்

வேளச்சேரியின் மிக உயர்ந்த அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் கதை சொல்லிப் பகுதிக்காக திரு. கௌதம நீலாம்பரன் அவர்களை சந்தித்தபோது அடுக்குமாடிக் கட்டிடம் போல் அவர்களது மனமும் உயர்ந்தே நின்றது. தமிழ் மரபில் மறந்துப் போன, குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் மறக்கடிக்கப்பட்ட விருந்தோம்பல் முறையை மீண்டும் கண் முன் கொண்டுவந்தவர். அன்பான உபசரிப்பு, பணிவான பேச்சு, என நம் மனதை முதல் சந்திப்பிலேயே கவர்ந்து விடுவதில் வல்லவர்.


கதை சொல்லிப் பகுதியின் நோக்கம் பற்றியும், அதன் செயல்பாடு பற்றியும் எடுத்து சொன்ன பிறகு மிகவும் ஆவலாக கதை சொல்லி பகுதிக்கு தயாரானார். கொளுத்தும் வெயிலின் மத்தியானப் பகுதி என்றாலும், பெரிய அளவில் தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காக பல வசதிகளை இழந்து கதை சொல்லிப் பகுதியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அவர் எழுதிய மூன்று கதைகளை மிக நேர்த்தியாக சொல்லி முடித்தார். குறிப்பாக மூட நம்பிக்கைகளையும், புறம் பேசுதலையும் உடைத்தெறியும் அவரது கதைகள் எக்காலத்திற்கும் எற்றவையாகவே இருக்கின்றன.

கௌதம நீலாம்பரன் கதைகள் - ஆகாய ஓவியம்

 

நிமிடம்: 26 --  நொடி: 01

 



கௌதம நீலாம்பரன் கதைகள் - நரகாசுரவதம்

 

நிமிடம்: 26--  நொடி: 03

 



கௌதம நீலாம்பரன் கதைகள் - களிப்பூட்டு

 

நிமிடம்: 10 --  நொடி: 00

 

14 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

மிக அருமையாக இருக்கிறது.. அதுவும் பூனை குறுக்கே போவது பற்றி கௌதம நீலாம்பரன் அளித்திருக்கும் விதம் வியக்க வைக்கிறது. இப்போதுதான் அவரது புத்தகங்களை தேடிக் கொண்டிருக்கிறேன். அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி கூடு நண்பர்களே.

அனுப்பியவர் செந்தாமரை on Saturday, 5.06.10 @ 00:46am

நியாயமாக இந்தப் பகுதிக்குள் நுழைந்ததுமே நான் மெய் மறந்து கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். நல்ல முயற்சி.

அனுப்பியவர் தேவன் சுந்தர் on Sunday, 13.06.10 @ 08:36am

mooda nammbikkaigalai udaitheriyum kadhaigal. arupudhamanavai. neelambaran patri ippodhuthan arindhuk konden. avaradhu sarithira navalgalai udanadiyaga padika vedum.

அனுப்பியவர் Muthu selvan on Monday, 14.06.10 @ 22:17pm

aagaya oviyam kadhai arummaiyaga irundhadhu. ivaradhu kuralil ketak miga arvamga irukiradhu. nanri.

அனுப்பியவர் Ravi on Monday, 14.06.10 @ 22:26pm

nalla kadhaigal. nalla anubavam.

அனுப்பியவர் Sundhar on Monday, 14.06.10 @ 22:38pm

puthiyadhoru anubavamaga irundhadhu. innum niaya kalaiganargalin kadhaik ketka vendum.

அனுப்பியவர் Kavitha on Tuesday, 15.06.10 @ 00:00am

miga nalla muyarchi. vallthugal.

அனுப்பியவர் Sedhu madhavan on Tuesday, 15.06.10 @ 22:28pm

irandu kadhai solligalum miga (tamilmaga, neelammbaran) nertiyaga sonna vidham arumai. innum pala eluthalagalin kuralil ketka aarvamai irukkirom.

அனுப்பியவர் Pandiaraj on Tuesday, 15.06.10 @ 22:36pm

kadhaigal anaithum arumai. anal konjam neelamaga irukkiradhu.

அனுப்பியவர் Thilagan on Tuesday, 15.06.10 @ 22:52pm

nalla concept. puthumaiyaga irukkiradhu.. valthugal.

அனுப்பியவர் Karthi on Tuesday, 15.06.10 @ 23:49pm

indha kadhai sollal bani inaya ulagirku pudhidhu. valthugal. menmelum valarga.

அனுப்பியவர் Nandhakumar on Wednesday, 16.06.10 @ 02:45am

Miga nalla muyarchi. thodarndhu update seidhal nanraga irukum. naan varaa vaaram vandhu yemandhup pogiren. please.

அனுப்பியவர் ப்ரியன் on Tuesday, 22.06.10 @ 02:33am

மிக சிறந்த பகுதி... மூன்றும் முத்துக்கள்... கௌதம நீலாம்பரன் அவர்களுக்கு நன்றிகள் பல... ப. ரமேஷ்

அனுப்பியவர் Ramesh on Friday, 2.07.10 @ 02:04am

Ayya,

Migavum arputhamaana kathaigal. Arumayaana vilakkangal. Pagirvirkku nandri.

அனுப்பியவர் சபரினாதன் on Sunday, 4.07.10 @ 03:26am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.