வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கவிதைகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 
 

சில கவிதைகள் :

விதி

அந்திக்கருக்கலில்
இந்தத்திசை தவறிய
பெண்பறவை
தன் கூட்டுக்காய்
தன் குஞ்சுக்காய்
அலை மோதிக்கரைகிறது.

எனக்கதன்கூடும் தெரியும்
குஞ்சும் தெரியும்

இருந்தும்
எனக்கதன்
பாஷை புரியவில்லை.

--கலாப்ரியா 

-----------------------------------------

சைக்களில் வந்த
தக்காளி கூடை சரிந்து
முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்து திசைகளிலும் பழங்கள்
தலைக்கு மேலே
வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்
நசுங்கி போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை

--கல்யாண்ஜி


-----------------------------------------

ஒரு கட்டு வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு புகையிலை
வாய் கழுவ நீர்
பிளாஸ்க் நிறை ஐஸ்
ஒரு புட்டி பிராந்தி
வத்திப்பெட்டி சிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.

--நகுலன்

-----------------------------------------
வாழ்க்கை

நான் என் காலை வைக்கவேண்டிய படி எது?
நான் குலுக்க வேண்டிய கை,
நான் அணைக்க வேண்டிய தோள்,
நான் படிக்க வேண்டிய நூல்,
நான் பணியாற்ற வேண்டிய இடம்
ஒன்றும் எனக்குத் தெரியவில்லை

இப்படி இருக்கிறது வாழ்க்கை.

-- பசுவய்யா 

-----------------------------------------

என்ன மாதிரி

என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவது போல

கடையா? வீடா? கூடமா? கோயிலா?

என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்

அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்.

என்ன மாதிரி உலகம் பார் இது.

--ஞானக்கூத்தன்

 

 

 
     
     
     
   
கவிதைகள்
1
 
 
     
   
  -----------------------------------  
 

கவிதைகள்

கவிதை என்பதற்கு பல பார்வைகளில் வெவ்வேறு வரையறைகள் உண்டு. கவிதை சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்திலக்கியக் கலை வடிவம் ஆகும். உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

 
  -----------------------------------  
  தமிழின் முக்கியமான கவிஞரான ‘பிரமிள்’ எழுதிய புகழ்பெற்ற கவிதை இது  
 

சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் முடிவற்ற பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச்செல்கிறது

 
  -----------------------------------  
  புதுக்கவிதை சுருக்கமான வரலாறு  
     
  http://www.jeyamohan.in/?p=290  
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS கவிதைகள்
கவிதைகள் வாயில்

தேடல்

இதயா செவ்வாய் , 17-08-2010, 10:16 PM

நமக்குள் இருக்கும்
ஊடலால்
நகங்களை கடித்துக் கொண்டே
உன் வீட்டைக் கடக்கையில்..
சட்டென
ஒரு கணம் நின்று!
எட்டிப் பார்க்கிறது
என் மனம்!
நீ! வீட்டில் இருக்கிறாயா என்று!!..

------------------------------------------------------------------------
நட்பின் இறப்பு

அலுவலக பணிநிமித்தமாக
அன்றே வந்து
அன்றே திரும்புவதாக உன் எண்ணம்...

நமக்குள் இருக்கும்
சிறு ஊடலை இனம்காட்டி..

முன்னூறு மைல் கடந்து
முகம் கட்டாமலே சென்றுவிட தீர்மாணித்தாய்...

நீ வந்திருக்கும்
செய்தியறிந்து

திரும்பிச் செல்லும்
சி்ல நிமிடங்களில்
ஓடோடி வந்தேன்...

மழை அழுதுக் கொண்டிருக்க!
இடியும் மின்னலும் புன்னகைக்க!
என்
அலைபேசி அழைப்புகள்
அத்தனையும்
அலட்ச்சியப் படுத்தினாய்!...

உள்ளுணர்வின் வழிகாட்டல்
உன் பேருந்தை நெருங்க...

மீண்டும்மொரு அழைப்பில்
"பேருந்து புறப்பட்டுவிட்டது
பார்க்க முடியாது" - என்று
சொன்ன ஒரு "பொய்யின்" முடிவில்...

கிளம்பாமல் நின்று கொண்டிருந்த
பேருந்தில்- நீ!
இருக்கும்
இருக்கையை அறிந்தேன்..

நட்பின் தினத்தன்று
இறந்தது- அந்த
நண்பன்! மட்டுமல்ல
நானும்தான்!!...



 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

3 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

miga rammiyamaana kavithai. nalla solthedal. valthugal.

அனுப்பியவர் Kavibarathi on Thursday, 1.07.10 @ 22:14pm

nilaa patri yaar eluthinaalum sirappaagave irukiradhu. nalla kavithai nanbare..

அனுப்பியவர் Sesu on Friday, 2.07.10 @ 02:23am

மூச்சு முட்ட வைக்கும் நிர்வாணம் போல ஒப்பனையற்ற வார்த்தைகள். நிஜத்தின் காரமும் வீச்சமும் வழிந்தோடுகின்றன நேசமித்ரனின் கவிதை வீதிகளில். நெஞ்சில் அறையும் கவிதைகளுக்காக வாழ்த்துக்கள்.

அனுப்பியவர் சுப. முத்துக்குமார் on Tuesday, 27.09.11 @ 22:31pm

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.