வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------

வாழ்வில் நாம் நினைக்கும் பல இலக்குகளை நம்மால் அடைய முடிவதில்லை. சரி நம்மால் முடியாது இந்த முயற்சியை கைவிட்டு விடுவோம் என நினைக்கும் தருவாயில் புதிய நம்பிக்கைகள் தோண்றி நம்மால் சாதிக்க முடியும் என்ற சிந்தனைக்கு நம்மை கொண்டு செல்கிறது. உண்மையில் நம்முடைய இலக்குகளை அடைய இந்த புதிய நம்பிக்கைகள் எந்தவகையிலும் உதவுவதில்லை. மாறாக நம்மை ஒரு உறுதியான முடிவெடுக்க விடாமல் ஒரு நிலையற்ற வாழ்கை வாழ இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. நம்மை நாம் தோற்றுவிட்டோம் என்று எண்ணிக்கொள்ள இயலாது. அதே சமயத்தில் நம்மை வெற்றியாளர் என்று சொல்லிக்கொள்ளவும் முடியாது. இதற்கு இடைப்பட்ட நிலையில் நாம் காலம் தள்ளிக்கொண்டிருக்க இந்த நம்பிக்கைகள் பயன்படுகின்றது. இப்படிப்பட்ட ஒரு துன்பமிக்க உணர்வை நாம் கற்பனை செய்து பார்க்கின்றோம். ஆனால் பலர் இதை தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் மிக முக்கியமானவர்கள் பங்குச்சந்தையில் ஈடுபடும் நபர்கள்.

நாம் லாபம் சம்பாதித்துவிட்டோம் என்று சந்தோஷம் கொள்வதும், மறுநாளே நஷ்டம் அடைந்து துவண்டுவிடுவதும், அதற்கு அடுத்த நாள் மீண்டும் லாபம் சம்பாதித்து... இப்படியே லாபம், நஷ்டம் என்று மாறி மாறி நிகழும் நிகழ்வில் நிலையான சந்தோஷமும் இல்லாமல், நிலையான துக்கமும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் துவண்டுபோவார்கள். பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களிடம் பல திட்டங்கள் இருக்கும். ஆனால் எந்த செயல்பாடுகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்காது. ஆற்றில் விழுந்த இலைபோல, சந்தை செல்லும் போக்கில் அடித்துச் செல்லப்படுவார்கள். அப்போது ஏற்படும் இடர்பாடுகளை அவர்கள் சந்தித்தே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.

பங்குச்சந்தையில் மூன்றுவிதமான மனிதர்கள் இருக்கின்றாகள்.

முதலாமவர்: அவருக்கு பங்குச்சந்தை பற்றி எந்த விபரமும் தெரியாது. முதலீடு செய்யலாமா வேண்டாமா என்ற சிந்தனையிலேயே இருப்பார்கள்.

இரண்டாம் நபர்: தெரியாமல் முதலீடு செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்தவர்கள். அந்த தொகையை எப்படியாவது பங்குச்சந்தையில் இருந்தே மீட்க வேண்டும் என்று போராடுபவர்கள்.

மூன்றாம் நபர்: பங்குச்சந்தை பற்றி அனைத்து விசயங்களும் இவர்களுக்குத் தெரியும். இவர்கள் பங்குச்சந்தையில் பணம் சம்பாதிக்க பலவிதமான வித்தைகளை கற்று வைத்திருப்பார்கள். ஆனாலும் வெற்றிகரமாக பணம் சம்பாதிக்க இயலாமல் இருப்பவர்கள்.

மேற்கண்ட இந்த மூன்று நபர்களுக்குமே பிரச்சனை ஒன்றுதான் சந்தை அவர்களின் பிடியில் இருக்காது. சந்தை ஏற்படுத்தும் விளைவுகளுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையை நானும் உணர்ந்திருக்கின்றேன். இந்த சுழற்சி முறையில் இருந்து தப்பிக்க பல காரணங்களை, பல காரியங்களை தேடியிருக்கின்றேன். அகப்பட்ட விசயங்களை பங்குச்சந்தையில் ஈடுபடுபவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
.
தோற்றவர்களின் சிந்தனை ஒன்றிணையும் போது, அந்த சிந்தனை அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்லும் என்பது எனது நம்பிக்கை. எனவே உங்களின் சிந்தனைகளையும் என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
காணாமல் போன காளையைத் தேடி ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 



பூபதி

ஊர் : உழைப்பிற்கு பெயர் பெற்ற ஊரை சேர்ந்தவன்.

தொழில் :பிடித்தமான தொழிலை தேடி இன்று வரை ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

விருப்பம் : மனித விருப்பங்கள் மாறக்கூடியது என்பதற்க்கு நானும் ஓர் உதாரணம்.

விரும்பி படிப்பது: பாரதி, பாரதி சார்ந்த எழுத்துக்களை.

விருப்பமானவர் : பன்றி ஏன் தெருவிற்கு வந்தது என பகுத்தறிவு பேசிய பாவேந்தர்.

பிடித்த எழுத்தாளர் : இன்னும் பிடிபடவில்லை.

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பூபதி தொடர்கள் வாயில்


காளையை கட்டிப்போடும் சக்தி - 3

பூபதி  

எவ்வளவு சிறப்பான ஆயுதமாக இருந்தாலும் அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்ற விதத்தில்தான் அதன் பயன்பாடு அமைந்திருக்கும். அதைப்போல எவ்வளவு சிறப்பானதொரு வித்தையை நீங்கள் அறிந்து வைத்திருந்த போதிலும் அதை எப்படி நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள் என்பதை பொருத்தே அதன் பயன்பாடு அமைந்திருக்கும்.

நம்முடைய வாங்கும் சக்தியை அதிகரிக்க நம்முடைய முதலீட்டை மூன்றாக நாம் பிரித்து வைத்திருந்தால் மட்டும் போதாது, முதலீடு செய்வதற்கு முன் சில முக்கிய விசயங்களை நாம் கவணிக்க வேண்டும். அந்த முக்கிய விசயம் வெறொன்றும் இல்லை நாம் ”தேர்வு செய்யும்” விதம்தான் அது. கண்முன் இருக்கும் பல வகையான பங்குகளில் எதை தேர்வு செய்கிறோம் என்பதை பொருத்தே நாம் அடையப்போகும் பயன் அமைந்திருக்கிறது.

புத்தரின் வாழ்வில் நிகழ்ந்ததாக சொல்லப்படும் ஒரு நிகழ்வு, வழக்கம் போல பிச்சையெடுக்க ஊரினுள் சென்ற போது அங்கிருக்கும் சிலரால் புத்தர் கேளிசெய்யப்படுகிறார். அதென்ன நீங்கள் மட்டும் ஞானமடைவது, அப்படி ஒன்று இருந்தால் அது எல்லோருக்கும் நிகழவேண்டியதுதானே! புத்தர் அமைதியாக கேளி செய்தவர்களை நோக்கி அங்குள்ள மக்களிடம் சென்று அவர்களுடைய விருப்பங்களை அறிந்துவரச்சொல்கிறார். மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்துகிறார்கள் அதில் ஒருவரின் விருப்பம் கூட நான் ஞானமடைய வேண்டும் என்ற வகையில் இல்லை. எனவே புத்தர் தன்னுடைய பதிலை இப்படி வெளிப்படுத்துகிறார் “யாருமே ஞானமடைய விரும்பவில்லை அதனால் யாரும் ஞானமடையவில்லை”  எதை தேர்வு செய்கின்றீர்களோ அதை நோக்கியே உங்களின் பயணம் அமைந்திருக்கும். இது வாழ்க்கைக்கு மட்டுமல்ல வாழ்வில் வளர்ச்சியை உண்டாக்கும் பங்குச்சந்தைக்கும் பொருந்தும்.

பங்குகளை தேர்வு செய்வதற்கு நமக்கு பெரிதும் உதவுபவை சந்தை தொடர்பான செய்திகள். சந்தை பற்றிய செய்திகள். செய்திகளை சேகரிக்க நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை ஏற்கனவே பங்குச்சந்தையில் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். அந்த நண்பர்களை தினமும் சந்தித்து தொடர்ந்து விவாதியுங்கள் “அப்புறம் சந்தையை பற்றி என்ன சொல்கிறார்கள்”, “சந்தை இனி எப்படி இருக்கும்” என்ற கேள்விகளுடன் அவர்களை அனுகினாலே போது மடை திறந்த வெள்ளம்போல கொட்டத்தொடங்குவார்கள். அவர்கள் சொல்லும் அனைத்து விசயங்களையும், அந்த விசயங்கள் மூலம் நிகழப்போகும் விளைவுகளையும் மனதினுள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடன் உரையாடும்போது அவர்களுக்கு என்ன தெரிந்துவிடப்போகிறது என்று மட்டும் அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். நவீன தொழில் நுட்பம் மற்றும் பங்குச்சந்தையில் ஈடுபடுவர்களின் தகவல் தொடர்பு போன்றவற்றின் மூலம் அனைவரும் பங்குச்சந்தையின் செய்திகளை அறிந்து வைத்திருக்கின்றார்கள்.

ஒவ்வொரு செய்தியும் சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்களிடமே கேளுங்கள். அவை ஆக்கபூர்வமானதா அல்லது அழிவை உண்டாக்கக்கூடியதா என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். செய்திகளை சேகரித்து அதையே முதலீட்டிற்கான சாதனமாக பயன்படுத்தும் நண்பர் ஒருவர் இருக்கின்றார். எந்த பங்குகள் எப்போது Dividend கொடுப்பார்கள், எப்போது Stock split ஆகும் எந்தெந்த தேதிகளில், மாதங்களில் நிறுவணங்களின் ஆண்டறிக்கைகள் வெளிவரும். சந்தை தொடர்பான அரசின் செய்திகள் என்னென்ன அந்த செய்தி எந்த துறைகளை விளைவுகளை உண்டாக்கும். உலகச் சந்தையின் செய்திகள் என்னென்ன என்கின்ற விசயங்களை மிகத்தெளிவாக அறிந்து வைத்திருப்பார். அவர் சேகரித்த செய்திகளை அடிப்படையாகக்கொண்டே அவரின் முதலீட்டு செயல்பாடுகள் அமைந்திருக்கும். சில நேரங்களில் சந்தை அற்புதமாக மேல் நோக்கி சென்று கொண்டிருக்கும் அனைவரும் பங்குகளை ஆவலோடு வாங்கிக் கொண்டிருக்கையில் மிக அமைதியாக இருப்பார், ஏன் எதுவும் வாங்கவில்லையா என்று கேட்டோமானால் “இல்லை, இப்படி ஒரு செய்தி இருக்கிறது, இப்போது விலை அதிகரித்தாலும் இரண்டொரு நாளில் சந்தை மீண்டும் இறங்கிவிடும்”. என்பார் பெரும்பாலும் அவர் சொன்னபடிதான் நடந்திருக்கிறது. எனவே செய்திகள் சந்தையின் இரத்த ஓட்டம் போன்றது அதை அறிந்து வைத்திருங்கள் அல்லது அதை அறிந்தவர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.

நீங்கள் வாங்க விரும்பும் பங்கின் நிறுவனம் தொடர்பாக ஏதேனும் செய்திகள் வர இருக்கிறதா! அந்த துறை சார்ந்த அரசின் செய்திகள் ஏதேனும் வர இருக்கிறதா, அந்த நிறுவனத்தை பாதிக்கும் உலகக்காரணிகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை முதலீடு செய்வதற்கு  முன் ஒரு நிமிடம் செலவளித்து தெரிந்துகொள்ளுங்கள்! ஒரு நிமிடத்தில் தெரிந்துகொள்ள முடியுமா என ஆச்சரியம் கொள்ள வேண்டாம், சந்தைக்கு செய்தி எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்துவிட்டதனால் இது மிகவும் சாதாரணமான விசயமாகிவிட்டது. சந்தையில் உள்ள நண்பரிடம் கேட்டாலே சொல்லிவிடுவார். அதுவும் சிரமம் என்றால் www.buzzingstocks.com என்றொரு தளம் இருக்கிறது அங்கு சென்று நீங்கள் வாங்க விரும்பும் பங்கின் பெயரை type செய்தீர்களானால் அந்த நிறுவனத்தைப் பற்றிய செய்திகள் அனைத்தையும் அந்த தளமே உங்கள் முன் கொண்டுவந்து கொடுக்கும் அவற்றை படித்துப்பார்த்த பின்னர், ஏதேனும் எதிர்மறையான செய்திகள் இருக்கிறதா இல்லையா என அறிந்துகொண்ட பின்னர் அந்த பங்குகளை வாங்குவதா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

பங்குகளை வாங்கும்போதும் மட்டுமல்ல வாங்கி வைத்திருக்கும் பங்குகளை விற்கும்போதும் செய்திகளை கவணிக்க வேண்டும். வைத்திருக்கும் பங்குகளை விற்ற பிறகு ஒரு நல்ல செய்தியின் மூலமாக அந்த பங்கின் விலை அதிவேகமாக மேல் நோக்கி சென்றதனால் வருத்தமடைந்த பலர் உண்டு. பங்குச்சந்தையில் ஈடுபடுவதற்கு முன் வேண்டுமானால் நீங்கள் தனித்த நபராக உங்களை எண்ணிக்கொள்ளலாம் ஆனால் எப்போது பங்குச்சந்தைக்குள் வந்துவிட்டீர்களோ அப்போதே உங்களின் தனித்த தன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டதாக கருதிக்கொள்ள வேண்டும். உங்கள் பிரச்சனை, உங்களின் குடும்பப்பிரச்சனைகளை மட்டுமே கவணித்துக்கொண்டிருந்த நீங்கள் அந்த தனித்த நிலையில் இருந்து வெளியே கட்டாயம் வந்தேதீர வேண்டும். இனி உலகில் எங்கு என்ன பிரச்சனை நிகழ்ந்தாலும் அது உங்கள் பிரச்சனையே என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அந்த உணர்வே முதலீடு செய்வதற்கான முதல்படி. இதோ இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் லிபியா நாட்டுபிரச்சனை அந்நாட்டு மக்கள் பிரச்சனை மட்டுமல்ல உங்கள் பிரச்சனையும்தான். ஜப்பானை தாக்கிய சுனாமி அந்நாட்டு மக்களை மட்டுமல்ல,  தாக்குதல்களுக்கு உள்ளானது நீங்களும்தான் என்பதை உணருங்கள். ஜப்பானை சுனாமி தாக்கியதும் IT, STEEL, PHAMA போன்ற துறைகளில் மாற்றம் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாயின. இப்படிப்பட்டதொரு உலகலாவிய சிந்தனையும், அதை அடிப்படையாகக்கொண்டு முதலீட்டு முனைவுமே முக்கியம்.

தொடரும்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

5 கருத்து பதிவு!
கருத்துக்களை பதிவு செய்ய!

appadaa. oru valiyaaga meendumungal thodar vandhuvittadhu. magizhchi. nanraaga ulladhu. nanri.

அனுப்பியவர் Kumar on Monday, 21.03.11 @ 22:50pm

pangu chandhai inayatthil velivarum ore thodar idhuthaan. miga sirappagavum irukkiradhu.

அனுப்பியவர் Kadhir on Monday, 21.03.11 @ 22:56pm

www.buzzingstocks.com இதில் நிறைய பயனுள்ள தகவல்கள் பெற்றேன். நன்றி பூபதி. ஆனால் தொடர்ந்து எழுதுங்கள். எப்படியும் இத தொடரை பல ஆயீரம் பேர் படிப்பார்கள். ஏன் அவர்களை ஏமாற்றுகிறீர்கள். நான்கே மூன்று மாதங்களாய் வந்து பார்த்துப் போகிறேன்.

அனுப்பியவர் செல்லதுரை on Monday, 21.03.11 @ 23:25pm

pangu sandhai patri niraya kelvigal irukiradhu. innum niraya paditthuvittu ketkiren. thodarndhu eluthungal sir.

அனுப்பியவர் Muthu on Tuesday, 22.03.11 @ 00:16am

pharma ponra thuraivaariyaaga eppodhu eludhuveergal? adhuellorukum payanulladhaai irukkum.

அனுப்பியவர் Kavin mozhi on Tuesday, 22.03.11 @ 00:18am

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)
s
   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.