வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.

தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

 

 
     
     
     
   
பயணக் கட்டுரை
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


சக்தி ஜோதி

கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா மற்றும் சீன பிரதமர்களின் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பரிவர்த்தனைத் திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், சீனாவிற்கு இந்தியாவில் இருந்து 100 இளையோரைக் கொண்ட குழு ஆண்டு தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்தக் குழுவினர் சமீபத்தில் சீனாவிற்குச் சென்றுள்ளார்கள். இக்குழுவில் தமிழ்நாடு சார்பில், திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் 2001 முதல் இயங்கிவரும் ஸ்ரீ சக்தி சமூகப் பொருளாதாரக் கல்வி நலன் அறக்கட்டளையின் இயக்குநரும், கவிஞருமான சக்திஜோதி அவர்கள் சீனாவிற்கு சென்று வந்துள்ளார். தனது சீன அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறார்.
தொடராக வரவிருக்கும் இந்தப் பகுதியின் அனைத்துக் கட்டுரைகளும் வாசகர்களுக்கு உறுதியாக பயனளிக்கக் கூடிய ஒன்று அமையும் என்பதில் எமக்கு ஐயமில்லை.

இனி அவரைப் பற்றியும் அவரது நிறுவனம் பற்றியும் அவரது பயணத்திற்கான காரணம் பற்றியும் ஒரு விரிவான அறிமுகம்.

சக்தி ஜோதி அவர்கள் "நிலம் புகும் சொற்கள்" என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளை:

ஸ்ரீ சக்தி சமூக பொருளாதார கல்வி நலன் அறக்கட்டளையானது 21-12-2001 அன்று திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்டது. தற்பொழுது 680 கிராமங்களை உள்ளடக்கி திண்டுக்கல், தேனி, ஈரோடு மற்றும் கோவை ஆகிய நான்கு மாவட்டங்களில் செயல்படுகிறது.

பார்வையும் நோக்கமும்

“வளர்ச்சியை நோக்கி....” சமூகத்தின் அனைத்து நிலையினரையும் வளர்ச்சியின் அடுத்த நிலை நோக்கி வழிநடத்திச் செல்வதையே, சமூகத்தின் மீதான நீள்பார்வையாகக் கொண்டு செயல்படுகிறது. கிராமப்புற வளங்களை மேம்படுத்துவதும், கிராமப்புற மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மனிதர்களை சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைப்பதற்காக ஒட்டு மொத்த ஆதார சக்தியை திரட்டித் தருவதற்காகவும், பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்திற்காகவும் சமூகத்தின் அனைத்து வகையான முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.

சமூக மேம்பாட்டு செயல்பாடுகள்

மகளிர் மேம்பாட்டில்….
1. 2880 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் 680 கிராமங்களில் 34,800 உறுப்பினர்களுக்கு மேல் சக்தி அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2. பாரத ஸ்டேட் வங்கியுடன் 18 கிளைகளுடன் இணைந்து சுய உதவிக் குழவினருக்கு கடனுதவிப் பெற்றுத்தரப்படுகிறது. இது வரை 56 கோடி வரை கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
3. மேலும் ர்னுகுஊ வங்கியுடன் இணைந்து 3 கோடி வரை கடனுதவி பெற்றுத் தரப்பட்டுள்ளது.

சுற்றுச் சூழல் மேம்பாட்டில் ...
சுற்றுபுறச் சூழல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வருடம் 1000 மரக்கன்றுகளை நடுதல், இதுவரை 7,000 மரக்கன்றுகளை சக்தி அறக்கட்டளையின் சார்பாக நடப்பட்டுள்ளது.

நீர்வடிப் பகுதி மேம்பாட்டு திட்டம் :
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் (நபார்டு) உதவியுடன் கிராமப்புறங்களின் இயற்கை வளங்களை மேம்படுத்துவது, மண் அரிப்பைத் தடுப்பது மேலும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவது மூலமாக கிராமங்களிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தந்து கிராம மக்களின் வாழ்;க்கைத்தரம் மேம்பாடு அடைய பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பாரத ஸ்டேட் வங்கியின் வணிக வழிகாட்டியாக (Business Facilitator)

திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளிலும் கடன் மற்றும் சேமிப்பு சம்பந்தமான வசதிகளை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தரும் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மருத்துவ முகாம்கள் :

கண் பரிசோதனை முகாம்இ எய்ட்ஸ் விழிப்புணர்வு முகாம்இ தாய்இ சர்க்கரை நோய் விழிப்புணர்வு, சேய் நல பரிசோதனை முகாம் உட்பட 15 வகையான மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 28இ000 மக்கள் பயனடைந்துள்ளனர்.

சக்தி சுய தொழில் பயிற்சி நிலையம் :
பயிற்சிகளில் சில…….
1. நான்கு இடங்களில் தையல் பயிற்சிப்பள்ளி
2. சானிடரி நாப்கின் பயிற்சி
3. கண்ணாடி மற்றும் பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி
4. ரெக்ஸின் மற்றும் ஜூட் பை தயாரிப்பு பயிற்சி
5. செருப்பு தயாரித்தல் பயிற்சி
6. கயிறு (ஊழசை Pசழனரஉவ) தயாரித்தல்
7. உணவு பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
8. இயற்கை விவசாயப் பயிற்சி

யுரேகா மாலை நேர பயிற்சிப் பள்ளி :
திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்காக 10 மையங்களில் மாலை நேர சிறப்பு பயிற்சி நடத்தப்படுகிறது

ஹெலன் பகல் நேர குழந்தைகள் காப்பகம் :
கொடைக்கானல் மலைப்பகுதியில் வடகவுஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் மேல்பள்ளம் காலணியில் மலைவாழ் குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

சக்தி இறகு பந்துக் கழகம் :
கிராமப்புற இளைஞர்கள் மாணவர்களுக்காக உன் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டிருக்கிறது.

பொது சுகாதாரம் :
அய்யம்பாளையத்தில் பெண்களுக்காக பொது கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள் :
1. குழந்தைகள் தினம் மாரத்தான் போட்டி
2. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள்
3. கல்லூரி மாணவர்களுக்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
4. இளைஞர்களுக்காக புகை, மது பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
5. உலக மகளிர் தின கருத்தரங்கம்
6. உடல் ஊனமுற்றோருக்காக சுய முன்னேற்ற சிறப்பு பயிற்சிகள்.

விருதுகள் :
1. பாரத ஸ்டேட் வங்கி விருது – 2 முறை
2. மாவட்ட ஆட்சியர் பசுமை விருது - 2 முறை
3. லைவ் விருது - லயோலா கல்லூரி
4. மக்கள் தொலைக்காட்சி விருது
5. சி.பா.ஆதித்தனார் விருது
6. நேரு யுவகேந்திரா தேனி மாவட்டம் மற்றும் மாநில விருது
7. நபார்டு விருது.

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS பயணக் கட்டுரை TS சக்தி ஜோதி தொடர்கள் வாயில்

சீனப் பயணக் கட்டுரைகள் - 9

சக்தி ஜோதி  

மலையும் மலை சார்ந்த பகுதியாக அமைந்த கியூசோ மாகாணம் குறிஞ்சி நிலப் பரப்பு என்று தான் சொல்லவேண்டும். உலகிலேயே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை என ஐந்து நிலப்பரப்பாகவும் அந்த நிலங்களை சார்ந்த வாழ்க்கையாகவும் பகுத்து அதனை இலக்கியமாக்கியவர்கள் தமிழர்கள் மட்டும் தான். இந்த நிலத்திலிருந்து உலகின் எந்தப் பகுதிக்கு யார் பயணித்தாலும் நமது நிலத்தோடும், நமது வாழ்க்கையோடும் தொடர்புபடுத்தி தான் பார்க்க முடியும். அந்த வகையில் கியூசோ எனக்கு குறுஞ்சி நிலமாக பட்டது.

மலைகளுக்கு உள்ளே அமைந்த நகரத்தையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் ஒவ்வொரு பகுதியையும் அணுகினேன். உலக நாடுகள் கண்டு வியக்கும் வண்ணமும், அமெரிக்காவை பலவழிகளில் அச்சுறுத்தும் வண்ணமும் தொழில் மற்றும் பொருளாதார கொள்கைகளில் மேம்பட்டுக் கொண்டே இருக்கும் சீனாவை எனது நிலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து எந்த வகையில் வேறுபட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் ஒவ்வொரு கணமும் வளர்ந்து கொண்டே இருந்தது.

என்னுடைய ஆர்வத்திற்கு விடையளிக்கும் வண்ணமாக அமைந்தது தான் கியூசோ பல்கலைக்கழகம். சீனாவின் கல்வி முறையின் மேம்பாட்டினை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்தப் பல்க்கலைக்கழகம் ஒன்றே போதும். 19வது நூற்றாண்டில் இந்தியாவில் முதன்முதலாக கல்கத்தாவில்தான் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. நமது பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டங்களின் தனித்துவத்தை மேம்படுத்துவதற்காக கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் என தனித்தனியே நமது பல்கலைக்கழகங்கள் பிரிந்து செயல்படுகிறது. சீனாவில் கியூசோ மாகாணத்தில் 1902ல் உயர்கல்விக்காக ஆரம்பிக்கப்பட்டது இந்த கியூசோ பல்கலைக்கழகம். 1951ல் கியூசோ மாகாணம் முழுமையும் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் இணைத்து உலகத் தரம் வாய்ந்த கியூசோ பல்கலைக்கழகமாக உருவாக்கப்பட்டது.

211திட்டத்தின்படி அதாவது உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களை சீனாவில் உருவாக்க வேண்டும் என்பதன் சுருக்கமே 211 திட்டம். ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 211 திட்டம் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த மேம்பாடு ஏற்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், அறிவியல் ஆராய்ச்சி, நிர்வாகம் மற்றும் நிறுவனத்திறன் மேம்படுத்துதல், சட்டம், தத்துவம் மட்டுமன்றி உடற்கல்வி மேம்பாடு என அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து கல்வியை உலகத்தரமாக்கியதாலேயே சீனா வல்லரசாக உருவாகி உள்ளது.

கியூசோ பல்கலைக்கழகத்தில் ஒரு நாளின் பாதி நேரத்தித்தைக் கழித்தோம். சுற்றிச் சுற்றி வந்தோம். பல்கலைக்கழகத்தில் நூறு பேரை தோந்தெடுத்து எங்களுக்கு இணையாக அனுப்பி வைத்திருந்தனர். எனக்கு துணையாக எமிலி என்ற பெண் வந்தார். இவர் கலை பிரிவில் மூன்றாம் ஆண்டு மாணவி. ஜியா ஷியாஷ்வா என்பது இவருடைய சீனப்பெயர்.இங்கு படிக்கும் அநேக மாணவர்கள் சீனப்பெயரை இயற்பெயராகவும், ஆங்கிலத்தில் ஒரு பெயர் என இரண்டு பெயர் வைத்திருக்கின்றனர். ஜோதி என்ற என்னுடைய பெயரை எமிலி பலமுறை உச்சரித்துப் பார்த்தும் உச்சரிப்பு வராமல் இறுதியாக ஜூடி என்று கூப்பிட ஆரம்பித்தார். ஜூடி என சீனமொழியிலும் எழுதிக் கொடுத்து எனக்கு பெயர் சூட்டு விழாவே வைத்து விட்டார்கள்.

சீனாமொழியில் எண்களின் உச்சரிப்பை எழுதி எனக்கு கற்றுக் கொடுத்தார். ஈ, ஏ, சா, ஸ், ஒ, லியோ, ச்சி, பா, சொ, சிர், என மனப்பாடம் செய்ய ஆரம்பித்தேன். வாண் டூ எங்களை வரிசையில் நிறுத்தி எண்ணும் போது அவருக்கும் முந்தி சீன மொழியில் எண்களை எண்ணுவதற்கு வசதியாக இருந்தது. என்னிடமும் தமிழில் ஒன்று, இரண்டு எப்படி எழுதுவது என கேட்டார். நான் 1, 2, 3…… என்று எழுதி காட்டினேன். அவர் நான் கேட்டது இதை அல்ல தமிழில் எப்படி எழுதுவது என்று கேட்டார். நல்லவேளையாக நான் தமிழில் M.Phil. பட்டம் பெற்றிருப்பதால் ௧, ௨, ௩, ௪, ௫, ௬, ௭, ௮, ௯, ௧o ., கழு என்று எழுதிக்காட்டினேன்.

பல்கலைக்கழகத்தைச் சுற்றிக் காட்ட எங்களோடு லாவல், கார்ல் வில்சன் மற்றும் லயன் உடன் வந்தனர். நாங்கள் சென்ற நாளில் பட்டமளிப்பு விழா நடந்து கொண்டிருந்தது. மாணவர்களின் ஆரவாரத்தில் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்து அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். பட்டம் பெற்ற அந்த மாணவர்கள் நமஸ்தே, வணக்கம் என சொல்ல பழகிக் கொண்டனர்.

இந்தப் பல்கலைக்கழகம, 9,386 ஏக்கரில் ஒன்பது வளாகங்களில் அமைந்துள்ளது. உலகத்திலேயே மிகச்சிறந்த நூலகம் இங்கு தான் இருக்கிறது. 38 லட்சம் புத்தகங்களும், 1.6 லட்சம் எலக்ட்ரானிக் புத்தகங்களும் நிறைந்திருக்கிறது இந்த நூலகத்தில். இந்த பல்கலைக்கழகத்தில் 45,360 மாணவர்கள் படிக்கிறார்கள். 2,367 பேராசிரியர்கள் பணிபுரிகிறார்கள். வெளிநாட்டு மாணவர்களும், வெளிநாட்டு ஆசிரியர்களும் இங்கு அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இந்தப் பல்கலைக்கழகத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று மாணவர் பரிமாற்றத் திட்டம். இத்திட்டத்தின் கீழ் 700 வெளிநாட்டு மாணவர்களுக்கு இங்கே கல்வியளிக்கும் விதமாகவும், 300 சீன மாணவர்களை உலகம் முழுவதும் உள்ள கியூசோ பல்கலைக்கழகத்தில் இணைந்துள்ள மற்ற கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியும், கல்வி வளர்ச்சியை மேம்படுத்துகிறார்கள். ஆசிரியப் பரிமாற்றத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

உடற்கல்வி பற்றி சொல்ல வேண்டுமென்றால் மிகச் சிறந்த உள், வெளி விளையாட்டு அரங்கங்கள் 2,10,000 சதுரமீட்டரில் அமைக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். ஒலிம்பிக்கில் நூற்றுக்கும் மேலான பதக்கங்களை வென்றதன் இரகசியம் அவர்களது விளையாட்டு அரங்கத்தில் இருக்கிறது. அவர்களின் விளையாட்டு பயிற்சியில் இருக்கிறது. நாங்கள் சென்றபோது உள், வெளி விளையாட்டு அரங்கங்களில் மாணவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

மதிய உணவிற்காக கல்லூரியின் உணவகத்திற்கு சென்றோம். அங்கு உள்ள ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் சிறுபான்மை மாணவர்களுக்கான தனி உணவகம் அமைக்கப்பட்டிருந்தது தான். சிறுபான்மையினரின் பாரம்பரிய பழக்கவழக்கங்களை மதித்தும் மத நம்பிக்கைகளுக்கு ஏற்றவாரும் உணவு பரிமாறப்படுகிறது.மதிய உணவிற்கு பிறகு திறந்த வெளியில் கல்லூரி மாணவர்களின் ஆடல் மற்றும் பாடல் நிகழ்ச்சியோடு அவர்களிடமிருந்து விடைபெற்றோம்.

எனது கைப்பற்றி எமிலியும், கார்ல் வில்சனும் கண்கள் கலங்கி வழியனுப்பினர். மலைகளின் நடுவே இருந்து அந்த மலையை விட்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் மிகச்சிறந்த ஒரு பல்கலைக்கழகத்தில் பாதம் பதித்த மகிழ்ச்சியிலும் சீனாவில் கிடைத்த மாணவ நண்பர்களில் நட்பிலும் மகிழ்ந்து அங்கிருந்து கிளம்பினேன்.

பயணிப்போம்...

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

கருத்து பதிவு

(Press Ctrl+12 to change between Thamizh and English typing)

பெயர்:*

மின்னஞ்சல்:*

வலை பதிவு:

கைப்பேசி:

கருத்து:*


 
(ஆசிரியரின் பார்வைக்குப் பின் கருத்துக்கள் பதிவேற்றப்படும்.)

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)
Best viewed in Windows 2000/XP
|  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome and all other Browsers Latest Version.